பள்ளி பேருந்து நடத்துநர்கள் மானிய உதவிக்கு மேல்முறையீடு செய்யலாம் - பிரதமர்

top-news
FREE WEBSITE AD

பாகான் செராய், ஜூன் 15: இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியங்களை அமல்படுத்தியதைத் தொடர்ந்து மானியம் பெறாத பள்ளி பேருந்து நடத்துநர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் மேல்முறையீடு செய்யலாம். தகுதி இருந்தால், அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
தகுதியான அனைத்து இலக்கு குழுக்களும் உதவி பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அவர்களுக்குத் தேவைப்பட்டால்  பள்ளி பேருந்துகளை இயக்குவதற்கு  வழங்கப்படும். மேல்முறையீடு செய்ய கால அவகாசம் உள்ளது என்று அவர் கூறினார்.

ஆனால் பெரிய நிறுவனங்கள் அல்லது லாபகரமான சுற்றுலா நிறுவனங்கள் போன்றவை வேண்டுமென்றே அதைப் பயன்படுத்திக் கொண்டால், அவர்கள் மானியங்களைப் பெறுவதில் அர்த்தமில்லை.

தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே மானியம் சென்று சேர வேண்டும் என்று அவர் இன்று கெரியான் ஒருங்கிணைந்த பசுமை தொழில் பூங்காவை (KIGIP) தொடங்கி வைக்கும் போது கூறினார்.

மேலும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோப், பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், நிதியமைச்சராக இருக்கும் அன்வர், மானியம் பெற்று கட்டணத்தை உயர்த்தும் பள்ளிப் பேருந்து நடத்துநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மீண்டும் எச்சரித்தார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியங்களை அமல்படுத்தியதைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு குறித்த பொதுமக்களின் கவலைகள் குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாகவும் அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *