மேலும் ஒரு கால்பந்து வீரர் மீது தாக்குதல்!

top-news
FREE WEBSITE AD

ஜோகூர் தாருல் தாசிம் (ஜேடிடி) மிட்ஃபீல்டர் சஃபிக் ரஹீம்  தாக்குதலுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 வயதான அவர், நேற்று செவ்வாய்க்கிழமை மே 7 இரவு தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், வாகனம் அடித்து நொறுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் போலீஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


ஜேடிடி பயிற்சி மையம் அருகே  தாம் தாக்கப்படுவோம் என்று  எதிர்பார்க்கவில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

இது போன்ற நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.

போலீஸ் அறிக்கையின்படி, சபீக் பயிற்சி மையத்தை விட்டு வெளியேறி, இங்குள்ள ஜாலான் ஸ்ரீ கெலமில் இருந்து லிடோ கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​செவ்வாய்க்கிழமை இரவு 10.05 மணியளவில் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களின் மோட்டார் சைக்கிள் அவரை அணுகியதோடு,

பின்பக்கம் இருந்தவர் சுத்தியலை எடுத்து தனது வாகனத்தின் பின்புறக் கண்ணாடியை உடைத்ததாக அவர் குறிபிட்டுள்ளார்.

உடனடியாக காரை நிறுத்தியதாகவும், சந்தேக நபர் ஆயுதத்தை சுட்டிக் காட்டியபோது மோட்டார் சைக்கிள் தனது வாகனத்தின் முன்பக்கமாக நகர்ந்ததாகவும் சபீக் தெரிவித்துள்ளார்


இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் முயற்சித்து வருவதாக ஜோகூர் பாரு தெற்கு OCPD உதவி ஆணையர் ரவுப் செலமட் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஃபைசால் ஹலிம் எனும் கால்பந்து வீரர் மீது ஆசிட் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், தற்போது அடுத்து இன்னொரு வீரரும் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *