ங்கா கோர் மிங் அறிவிப்பு ஆராயப்படுகிறது! - MACC

top-news
FREE WEBSITE AD

மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தற்போது குவாலா குபு பஹாருவுக்கான உள்கட்டமைப்பு நிதியுதவி தொடர்பாக வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் வெளியிட்ட அறிவிப்பை ஆராய்ந்து வருவதாக தலைமை எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் ஆசம் பாக்கி தெரிவித்தார்.

எம்ஏசிசி புகார் மையம் இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும்,  ஆனால் இதுவரை எந்த விசாரணை ஆவணமும் திறக்கப்படவில்லை," என்றும் அவர் இன்று புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கூறினார்.

கடந்த ஏப்ரல் 18 அன்று, உலு சிலாங்கூர் நகராட்சி மன்றத்திற்கு RM 5.21 மில்லியன் நிதியுதவியை Nga அறிவித்தார்.

கோலா குபு பஹாரு இடைத்தேர்தலுடன் இணைந்து இந்த நிதியை விடுவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகளால் இது விமர்சிக்கப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *