ஆசிட் வீசிய நபரைத் தேடும் முயற்சி தீவிரம்! – ரஸாருடின்

top-news
FREE WEBSITE AD


கால்பந்தாட்ட வீரர் ஃபைசால் ஹலிம் மீது ஆசிட்  வீசப்பட்ட வழக்கில் தொடர்புடைய  முஹம்மத் சுரேஷ் இம்ரான் என்பவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

 

இந்த வழக்கு தொடர்பாகத் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வரலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும்,  தற்போது இவ்வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சந்தேக நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து தவறான ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]