தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தேர்தல்! புதிய தலைமைத்துவம் அமைந்தது!
- Thinagaren Sanggaren
- 30 Nov, 2025
நவம்பர் 30,
மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து செயல்படும் கழகமான தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தேர்தல் கடந்த நவம்பர் 28 நெகிரி செம்பிலானில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தேர்தலில் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையா தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவராக வெற்றிப் பெற்றார். துணைத் தலைவராக ஜொகூரின் CANTUMAAN CHAAH தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் DOMINIC SAVARIMUTHU பொறுப்பேற்றார்.
தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் செயலாளராக நெகிரி செம்பிலானைச் சேர்ந்த SIVAKUMAR VELLASAMY பொறுப்பேற்ற நிலையில் ,பொருளாளராக மலாக்கா அலோர் காஜா தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியை PARVATHY ARUMUGAM பொறுப்பேற்றார். இந்த புதிய நிர்வாகம் 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் பொறுப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



