தென் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு! மலேசியர் இருவர் காயம்!

top-news
FREE WEBSITE AD


தென் தாய்லாந்தின் நாராதிவாட்டில் கடந்த  திங்கள்கிழமை இரவு 9.35 மணிக்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இரு மலேசிய பயணிகள் உட்பட நான்கு பேர் காயமடைதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான்தும்பாட்டைச் சேர்ந்த 38 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்கள் லேசான  காயங்களுக்கு ஆளானதாக சோங்க்லாவில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரி  அகமது  ஃபாஹ்மி அகமட் சர்காவி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட  இருவரும் சிக  நாராதிவட் ரச்சனகரின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கட்டுப்பாட்டு மையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில், சொந்தமாகத்  தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது ஆரம்பக் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இகட்டுப்பாட்டு மையத்திற்கு அருகில் அவ்விரு பெண்களும் இருந்ததால், அவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *