KLIA 1 - ஸ்கிரீனிங் நடைமுறைகள் கடுமையாக்கப்படும்! - சுகாதாரத்துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஆகஸ்ட் 29: சுகாதார அமைச்சகம் (MOH), மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் Bhd உடன் இணைந்து, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 1 வழியாக நுழையும் பயணிகளுக்கான ஸ்கிரீனிங் நடைமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

சர்வதேச விமானங்களில் வரும் ஒவ்வொரு பயணிகளும் தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸூல்கிஃப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

 கூடுதலாக, விமானம் அதிக ஆபத்துள்ள நாட்டிலிருந்து வந்திருந்தால் அல்லது அறிகுறிகள் உள்ள பயணிகள் இருந்தால், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் கேட் C22 க்கு அருகிலுள்ள  சுகாதார பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள், அங்கு மேலும் ஸ்கிரீனிங் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

 அதிக வெப்பநிலை, தோல் கொப்புளங்கள் அல்லது வீக்கமடைந்த சுரப்பிகள் போன்ற அறிகுறிகளை யாரேனும் வெளிப்படுத்தினால், அவர்களுக்கு சுகாதார எச்சரிக்கை அட்டை வழங்கப்பட்டு, அருகிலுள்ள சுகாதார வசதிக்கு பரிந்துரைக்கப்படும்," என்று KLIA டெர்மினல் 1 இல் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *