RM100,000 அபராதம்... சிலாங்கூர் FC மேல்முறையீடு செய்யும்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26: கடந்த மாதம் ஜொகூர் தாருல் தாசிமுக்கு (JDT) எதிரான அறக்கட்டளைப் போட்டியைத் தவிர்த்ததற்காக, RM100,000 அபராதம் மற்றும் மூன்று புள்ளிகளைக் கழித்துக் கொள்ளும் மலேசிய கால்பந்து லீக்கின் (MFL) முடிவை எதிர்த்து சிலாங்கூர் எஃப்சி மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்துள்ளது.

மே 5 அன்று  சிலாங்கூர் அணியின் முக்கிய விளையாட்டு வீரர் பைசல் ஹலீம் மீது "கொடூரமான" அமில தாக்குதல் மற்றும் "பிற தொழில்முறை கால்பந்து வீரர்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள்"  நிகழ்ந்ததைத் தொடர்ந்து போட்டியை ஒத்திவைக்குமாறு கோரியதாக கிளப் மீண்டும் வலியுறுத்தியது.

ஆனால், ஒத்திவைப்புக்கான கோரிக்கையை நிராகரித்த பிறகுதான் JDT உடனான விளையாட்டிலிருந்து விலகுவதாக சிலாங்கூர் FC கூறியது.

கிளப் இந்த முடிவை மேல்முறையீடு செய்யும்  என்பதோடு, கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் ஆராயும்" என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *