1000 கிலோ அரிசிக் கடத்தல் முறியடிப்பு! - Briged Tenggara PGA8

top-news
FREE WEBSITE AD

பதப்படுத்தப்பட்ட மானிய விலை அரிசிகளைத் தாய்லாந்துக்குக் கடத்த முயன்ற உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பொருள் பாதுகாப்புச் சிறப்புப் படையான Briged Tenggara PGA நடத்திய சோதனையில் 1000 கிலோ எடையிலான அரிசிகளைப் பறிமுதல் செய்தனர். காலை 10 மணியளவில் கிளாந்தான் Pasir Mas வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ஆடவரைக் கைது செய்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளின் மதிப்பு சுமார் 14,000 ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டுப் பொருள் பாதுகாப்புச் சிறப்புப் படையின் இயக்குநர் Datuk Nik Ros Azhan Bin Nik தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *