101 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! போலீஸ் அதிரடி!

top-news
FREE WEBSITE AD


பட்டர்வொர்த், ஜூலை 13:  பினாங்கு பட்டர்வொர்த் வெளிவட்ட சாலையில் (பிஓஆர்ஆர்) உள்ள பாகான் அஜாம் ஆர் & ஆர் பகுதியில் தெரு கும்பல்களை குறிவைத்து சிறப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மொத்தம் 101 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நள்ளிரவு 1.30 மணி முதல் 10 மணி வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் 250 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு கார்கள் சோதனை செய்யப்பட்டதாக பினாங்கு காவல்துறை தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

பினாங்கு மற்றும் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), சுற்றுச்சூழல் துறை (DOE), தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் (AADK),  குடிநுழைவுத் துறை, மற்றும் PLUS துணை காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறை 114 சம்மன்களை வழங்கியது மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 61 (1) இன் கீழ் ஜேபிஜே 245 வாகன தணிக்கை அறிவிப்புகளை வெளியிட்டது  என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *