மலேசியாவிற்குள் நுழைய 126 வெளிநாட்டினருக்குத் தடை!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஆக 20: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 மற்றும் முனையம் 2 இல் நேற்று மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) நடத்திய கூட்டு அமலாக்க நடவடிக்கையின் போது மொத்தம் 126 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டனர்.

KLIA முனையம் 1 இல், நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக 35 பாகிஸ்தானிய ஆண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்கள் போலியான தங்குமிட முன்பதிவுகளை வழங்கினர். மேலும் போதுமான செலவுத் தொகையும் வைத்திருக்கவில்லை என்பதோடு, திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டுகளும் வைத்திருக்கவில்லை.

விசாரணைகளில் அவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகள் அல்ல என்பது கண்டறியப்பட்டது. ஆனால் வேலைக்காக மலேசியாவிற்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படுவதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம்  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 இதற்கிடையில், KLIA முனையம் 2 இல், பல்வேறு குற்றங்களுக்காக 91 பேருக்கு மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து அறிவிப்பு (NTL) வழங்கப்பட்டது.

நுழைவைப் பெற “போக்குவரத்து தந்திரங்களை” பயன்படுத்த முயன்ற 64 இந்தியர்கள் அடங்கிய மிகப்பெரிய குழுவும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் ஹோட்டல் முன்பதிவுகள் அல்லது திரும்பச் செல்லும் விமான டிக்கெட்டுகள் இல்லை என்று விசாரணைகள் கண்டறிந்தன.

மாறாக, நாட்டில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்யும் நோக்கத்துடன் முகவர்களிடமிருந்து புதிய வழிமுறைகள் மற்றும் டிக்கெட்டுகளுக்காக அவர்கள் காத்திருந்தனர் என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் விளக்கியது.

போலி இ-பாஸ் ஆவணங்களைப் பயன்படுத்தி KLIA2 இல் இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகளும் பிடிபட்டனர், அதே நேரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேர் வெவ்வேறு மீறல்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

126 பேருக்கும் NTL அறிவிப்புகள் வழங்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் கிடைக்கக்கூடிய விமானங்களில் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *