1.2 மில்லியன் பேர் RM 100 புத்தக வவுச்சர்களால் பயன்பெறுவர்! - உயர்கல்வி அமைச்சு அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, மே 31: கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2024 இல் சிறப்பு கவனம் செலுத்தி, உயர்கல்வி நிறுவனங்களின் (IPT) மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்களை வழங்குவது கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

பாலிடெக்னிக் உட்பட அனைத்து உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து மொத்தம் 1.2 மில்லியன் மாணவர்கள் இந்த வவுச்சர்களால் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், புத்தகக் கண்காட்சியில் RM 100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்களை வழங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *