சிகாமட்டில் ஆற்றி மூழ்கி 14 வயது சிறுவன் மரணம்

top-news
FREE WEBSITE AD

சிகாமட், ஜூலை 21: நேற்று மதியம் சிகாமாட், Walter family-friendly recreation farm அருகிலுள்ள சிகாமட் ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்.

பொழுதுபோக்கு பகுதிக்குப் பின்னால் உள்ள ஆற்றங்கரையில், அவன் கடைசியாகப் பார்த்த இடத்திலிருந்து சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டது.

மாலை 4.08 மணிக்கு இது தொடர்பாக அழைப்பு வந்ததாகவும், நான்கு நிமிடங்களுக்குப் பிறகு மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சிகாமாட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  தளபதி முகமட் ஹாசிம் அப்துல் ரசாக் கூறினார்.

 மாலை 6.40 மணிக்கு ஆற்றங்கரைக்கு அருகில் பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *