142,510 பேர்‌ திவால்‌ நிலையிலிருந்து விடுவிப்பு! - அன்வார்

top-news
FREE WEBSITE AD


 புத்ராஜெயா, ஜூலை 26: கடந்தாண்டு அக்டோபர்‌ மாதம்‌ அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது வாய்ப்பு எனும்‌ திட்டத்தின்கீழ்‌ மொத்தம்‌ 142,510 பேர்‌ திவால்‌ நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்‌ என்று பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌ தெரிவித்தார்‌.

ஒரு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்திற்கும்‌ மேற்பட்ட தனிநபர்களும்‌  நிறுவனங்களும்‌ குடும்பங்களும்‌ தங்களின்‌ எதிர்காலம்‌ என்ன ஆகுமோ எனும்‌ பயத்தில்‌ சிக்கிக்‌ கொண்டிருந்தனர்‌. அத்தரப்பினரை திவால்‌ நிலையிலிருந்து திவால்துறை விடுவித்திருப்பது அவர்களுக்குப்‌ பேருதவியாக இருக்கும்‌. அவர்களின்‌ முன்னேற்றத்திற்கும்‌ அது வழிவகுக்கும்‌ என்று, புத்ராஜெயாவில்‌ திவால்துறையின்‌ நூற்றாண்டு விழாக்‌ கொண்டாட்டத்தில்‌ உரையாற்றியபோது அன்வார்‌ இவ்வாறு கூறினார்‌. 

குறைந்தபட்ச கடன்‌ அளவான ஐம்பதாயிரம்‌ வெள்ளியை ஒரு லட்சம்‌ வெள்ளிக்கு உயர்த்திய திவால்துறையின்‌ முடிவையும்‌ அவர்‌ பாராட்டினார்‌. திவால்துறைக்கும்‌ புத்ராஜெயாவுக்கும்‌ இதற்கு முன்னர்‌ கிடைத்திராத ஒரு வெற்றியாகவும்‌ இது விளங்குகிறது என்றார்‌ அவர்‌. 

திவால்‌ விவகாரத்தில்‌ அரசாங்கம்‌ எதுவுமே செய்யவில்லை என்று அனுமானித்து மக்கள்‌ கலக்கம்‌ அடைவது வழக்கமாக உள்ளது. இது உண்மை அல்ல. 1957ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை எந்தவொரு அரசாங்கமும்‌ ஒரு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்திற்கும்‌ மேற்பட்ட திவால்‌ விவகாரங்களுக்குத்‌ தீர்வு கண்டதில்லை என்று அன்வார்‌ தெரிவித்தார்‌. 

தேசிய மேம்பாட்டிலிருந்து மலேசியர்கள்‌ எவரும்‌ விடுபட்டு விடக்கூடாது  என்பதற்காக இரண்டாம்‌ வாய்ப்புக்‌ கொள்கைத்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்று அந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்ட பிரதமர்துறை (சட்டம்‌ மற்றும்‌ துறைசார்‌ சீர்திருத்தம்‌) டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான்‌ சைட்‌ குறிப்பிட்டார்‌ என்பது குறிப்பிடத்தக்கது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *