அரசு ஊழியர்கள் ஊதியம் உயர்வு! அரசியல் செய்யாதீர்கள் - FAHMI FADZIL

top-news
FREE WEBSITE AD

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 13 விழுக்காடு உயர்த்தப்படுவதில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை என தகவல் தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL உறுதிப்படுத்தினார். இது தொடர்பான செயலறிக்கை 2025 ஆண்டுக்கான பட்ஜெட்டில் முழுமையாக வழங்கப்படும் என தகவல் தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL தெரிவித்தார். 


AZMIN ALI கூறிவது போல KUALA KUBU BAHRU இடைத்தேர்தலுக்காக ஒற்றுமை அரசு இத்திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும், கடந்த 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு தற்போது ஒற்றுமை அரசாங்கம், அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

  மேலும் சுமார் ஓராண்டுக்கும் மேலாக இது தொடர்பான விவாதங்கள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும் தற்போது பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என ஒற்றுமை அரசாங்கத்தின் ஊடகத் தொடர்பாளருமான FAHMI FADZIL உறுதிப்படுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *