விபத்தில் 16 வயது ஆடவர் மரணம்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 20: கோலா சிலாங்கூரில் உள்ள ஜாலான் டத்தோ ஹுசின், கம்போங் புக்கிட் கூச்சிங் என்ற இடத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 16 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பெரோடுவா ஆக்சியாவுடன் மோதியதில்  உயிரிழந்தார்

விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் தனது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சாலையில் ஐந்து மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

தங்களுக்கு காலை 7:32 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், கோலா சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும்  அதன் பேச்சாளர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரி,  அவ்விளைஞனின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக  போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *