RM178,500 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! நால்வர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஜூலை 15: மூன்று முதியவர்கள் உட்பட நான்கு பேரைக் கைது செய்ததன் மூலம் போதைப்பொருள் கடத்தல் குழுவை போலீசார் முடக்கினர். மேலும், RM178,500 மதிப்புள்ள சட்டவிரோத பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.05 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல இடங்களில் மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் குழுவால் சோதனைகள் நடத்தப்பட்டதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

மேலும் தொடக்கக் கட்ட  விசாரணையில், இந்தப் போதைப்பொருள் குழு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து செயலில் உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் அவர்களிடமிருது உயர்ரக கார், மற்றும் உயர் ரக மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் அனைவரும் ஜூலை 19 ஆம் தேதி வரை விசாரணைக்கு உதவுவதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்  என்று ஹம்சா அகமது கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *