செந்தோசா கொலை தொடர்பாக 17 பேர் கைது! - தேசிய போலீஸ் தலைவர்
- Shan Siva
- 24 Sep, 2025
கோலாலம்பூர், செப் 24: இந்த ஆண்டு தொடக்கத்தில் கிள்ளானில் உள்ள தாமான்
செந்தோசாவில் இரண்டு பேரைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு கும்பலைச் ஏர்ந்த 17
சந்தேக நபர்களை போலிசார் கைது செய்தனர்.
2023 முதல் 33
உறுப்பினர்கள் மற்றும் ஒரு மலேசிய மூளையுடன் செயல்பட்டு வரும் இந்தக் கும்பல்,
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேராக்கில் கொலை, ஆயுதமேந்திய தாக்குதல், தீ வைப்பு
மற்றும் கும்பல் கொள்ளை உள்ளிட்ட பல வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாக தேசிய காவல்
துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டின்
தொடக்கத்தில், கிள்ளான் தாமான்
செந்தோசாவில் ஒரு கடையின் முன் இரண்டு ஆண்கள் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்திய பதிவு
சமூக ஊடகங்களில் வைரலானபோது, இந்தக் கும்பலைத்
தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
இந்தச் சம்பவம்
கும்பல்களுக்கு இடையிலான தவறான புரிதல் மற்றும் எல்லை குறித்த தகராறில் இருந்து உருவானது,” என்று அவர் இன்று புக்கிட் அமானில் ஒரு
செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
19 முதல் 44
வயதுடைய இரண்டு தனித்தனி குழுக்களைச் சேர்ந்த 17 சந்தேக நபர்கள், பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்)
சட்டம் 2012 இன் கீழ் செய்யப்பட்டதாக காலித் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



