KLCC தாக்குதல்: 18 பேர் கைது – சுற்றுலா பயணியும் உள்ளூர் நபரும் காயம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 27-

Polis Diraja Malaysia போலீசார், KLCC முன்பு இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கலவரச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 18 ஆண்களைக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் Suria KLCC முன்பாக நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணையின் படி, தெரு புகைப்படக்காரர்கள் குழுவினர், இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆண் சுற்றுலா பயணியைத் தாக்கியதிலிருந்து சம்பவம் தொடங்கியுள்ளது.

இந்தச் சண்டையை சமாதானப்படுத்த முயன்ற உள்ளூர் நபர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் மீது பின்னால் இருந்து கரம்பிட் கத்தி போன்ற ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அந்த நபர் பலரால் சூழப்பட்டு தாக்கப்பட்டதால், நிலைமை மேலும் பதற்றமாக மாறியது. சுமார் 30 பேர் வரை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டாங் வாங்கி மாவட்ட காவல் தலைவர் சசாலி அடாம் கூறுகையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் தொடர்புடையவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *