3 மாதங்களில் 18 குழந்தைகள் கைவிடப்பட்ட சம்பவங்கள் பதிவு
- Surendran Sumdraraj
- 06 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 6 –
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM), இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை நாடு முழுவதும் 18 குழந்தைகள் கைவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறுகையில், அவற்றில் சிலாங்கூரில் 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், சபா மற்றும் பினாங்கில் தலா இரண்டு சம்பவங்களும், ஜொகூர், நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் சரவாக்கில் தலா ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மட்டும் இதேபோன்ற 72 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும், சமூக நலத்துறை (JKM) கையாண்ட அனைத்து வழக்குகளிலும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும், சமூக நலத்துறை (JKM) மற்றும் தேசிய மக்கள்தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) ஆகியவற்றின் மூலம் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் தலையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



