பள்ளிக்கூடத்தில் அரசியல் வேண்டாம் - கல்வி அமைச்சர் Fadhlina sidek

top-news
FREE WEBSITE AD

பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் தலைமையேற்பதைக் கல்வி அமைச்சு மறுக்கவில்லை என்றாலும் பள்ளிக் கூடங்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கும்படி கல்வி அமைச்சர் Fadhlina sidek தெரிவித்தார். 

பள்ளி நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் அரசியல் தலைவர்கள் தனிநபர் சாடல், அரசியல் கருத்து முரண்கள் கொண்ட பேச்சுகளைத் தவிர்த்து பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளைப் பேச வேண்டும் என Fadhlina sidek வலியுறுத்தினார். 

இது தொடர்பாகப் பெற்றோர்களிடமிருந்து கல்வி அமைச்சுக்குப் பெறப்படும் புகார்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகவும், ஆளும் கட்சி எதிர்க்கட்சி எனும் பேதமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் Fadhlina sidek எச்சரித்தார். 

குறிப்பாக, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பள்ளிக்கூடமும் இதில் தனி கவனம் கொள்ளுமாறு கல்வி அமைச்சர்  Fadhlina sidek வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *