ஓட்டு போட்ட பின் இந்திய பிரதமர் மோடி கூறிய முதல் வார்த்தை

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் குஜராத்தில் பிரதமர் மோடி இன்று வாக்களித்த நிலையில், அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

 இந்திய நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதையடுத்து இன்று 94 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், அகமதாபாத் தொகுதியில் இருந்து பிரதமர் மோடி வாக்களித்தார். வாக்களித்த பிறகு வெளியே வந்த பிரதமர் மோடியுடன் பலரும் ஆர்வமாகப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் முடிந்தவரை வாக்களிக்க வேண்டும். இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத்தில் நான் ஒரு வாக்காளராக எப்போதும் வாக்களிக்கும் இந்த தொகுதியில் பாஜக சார்பில் அமித் ஷா போட்டியிடுகிறார்.

இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் தேர்தல் மேலாண்மை ஆகியவை உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.. உலகெங்கும் உள்ள நாடுகளில் நடக்கும் தேர்தல் முறைகளை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்தாண்டு இந்தியாவில் தேர்தல் நடக்கும் நிலையில், இதை ஜனநாயக திருவிழா என்றே சொல்லலாம். நான் மீண்டும் சொல்கிறேன். பொதுமக்கள் திரளாக வந்து வாக்களித்து இந்த ஜனநாயக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மோடி வாக்களித்த பின் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *