மனைவியைக் கொன்றவருக்கு 1 வாரம் தடுப்புக் காவல்!

top-news
FREE WEBSITE AD


ஈப்போ, ஜூன் 13: குழந்தையின் முன்னிலையில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் நம்பப்படும் நபரை ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

56 வயதுடைய சந்தேகநபர் இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவரை ஜூன் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  நீதிபய்தி  பராஹ் நபிஹா முஹமட் டான் அனுமதி வழங்கினார்.

கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைகளை எளிதாக்கும் வகையில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 9.26 மணியளவில் இங்குள்ள கம்போங் சிமியில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அவர்களது 12 வயது மகள் நேரில் பார்த்துள்ளார்.

ஈப்போ காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad பாதிக்கப்பட்டவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகக் கூறினார். அவரது மார்பில் மூன்று கத்திக் காயங்களும், தலையில் காயமும் இருந்தது

விசாரணைக்கு உதவுவதற்காக காலை 10 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்ததாக அபாங் ஜைனல் அபிடின் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *