பிரச்சாரத்திற்கு அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை – பாங் சாக் தாவோ

top-news
FREE WEBSITE AD


 

இந்த வார இறுதியில் கோலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது, ​​அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை பக்காத்தான் ஹராப்பானின் (PH) பாங் சாக் தாவோ மறுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பான் எந்த விதிகளையும் மீறவில்லை என்று தாம் நம்புவதாகக அவர் கூறினார்.

சட்டத் திட்டத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது என்று கோலா குபு பஹாரு போலீஸ் அகாடமியில் ஆரம்ப வாக்களிப்பு செயல்முறையை பார்வையிட்ட  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார் கூறினார்.

எதிர்க்கட்சிகள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் நாங்கள் நெறிமுறையாக பிரச்சாரம் செய்துள்ளோம் மற்றும் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

நேற்றைய தினம், PAS பொதுச்செயலாளர் தகியுதீன் ஹசான், பெரிக்காத்தான் அரசாங்கம் பிரச்சாரத்தின் போது அதன் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறினார்.

 இடைத்தேர்தலில் பிஎச் வெற்றி பெற்றால் கூட்டணி தேர்தல் புகார் மனு தாக்கல் செய்யும் என்று தக்கியுதீன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]