ஆவணங்கள் இல்லை என்றால் கைது செய்யப்படுவர்! - MACC

top-news
FREE WEBSITE AD

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் கைது செய்யாது என SPRM தலைமை ஆணையர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார். முன்னாள் பிரதமர் மகாதீர் மீதான விசாரணையில் அவரையும் அவர் பிள்ளைகளையும் கைது செய்வோம் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது இல்லை என்றும், தங்கள் சொத்துகளுக்கான முறையான ஆவணங்களை வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீரையும் அவர் பிள்ளைகளையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.


இது மகாதீருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் எண்ணுகிறார். SPRM யாரையும் அச்சுறுத்தவில்லை. கணக்கை மட்டுமே கேட்கிறோம், ஆவணங்கள் இல்லை என்றால் கைது நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என SPRM தலைமை ஆணையர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார்.


சொத்து விவரங்களையும் பண பரிவர்த்தனைக்கானச் சான்றுகளும் இருந்தால் SPRM ஐ கண்டு யாரும் பயப்பட வேண்டியது இல்லை. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *