தன் உடல்நலத்தை பொருட்படுத்தாத எம்.எஸ்.தோனி!!!எல்லாம் CSK ரசிகர்களுக்காக!!

top-news
FREE WEBSITE AD

கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி விளையாடியது சர்ச்சையானது. ஒன்பதாவது இடத்தில் இறங்கி விளையாடுவதற்கு, விளையாடாமல் இருந்திருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் உட்பட முன்னாள் வீரர்கள் பலரும் மகேந்திர சிங் தோனியை விமர்சித்தனர்.

ஆனால் அதற்கு முன்னரே மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு செய்து கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாகவே கடைசியாக களமிறங்கி குறைந்த பந்துகளை எதிர்கொண்டு விளையாடுகிறார் என்று சிஎஸ்கே தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது அவருக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கடந்த போட்டியில் பதினாறு ஓவர்களில் சென்னை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்து தத்தளித்துக் கொண்டிருந்த போது தோனி களமிறங்கி விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அப்போது ஏமாற்றம் அளிக்கும் விதமாக சர்துல் தாக்கூர் களம் இறங்கி விளையாடினார். அவர் சிறிது நேரம் அதிரடியாக விளையாட சென்னை அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.

மேலும் அவரும், சில பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகி வெளியேறிய பிறகு 19 ஆவது ஓவரில் ஒன்பதாவது விக்கெட்டாக மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார். ஹர்சல் பட்டேலின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேற, இப்படி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனி போட்டியில் விளையாடாமல் இருந்திருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் உட்பட பல முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர் கடைசியாக களம் இறங்கி விளையாடியதற்கான காரணம் சென்னை அணித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரசிங் தோனி கடைசியாக களமிறங்கி விளையாட அவருக்கு ஏற்பட்டிருக்கும் தசைநார் கிழிவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த சீசனின் தொடக்கப் போட்டிகளில் லேசாக இருந்த அந்த காயம் தற்போது பெரிதாகி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *