RM 2.1 மில்லியன் மதிப்பிலான அரிசி கைப்பற்றப்பட்டது!

top-news
FREE WEBSITE AD


 பாடி மற்றும் அரிசி ஒழுங்குமுறைப் பிரிவு சரவாக்கின் சிபுவில் உள்ள உரிமம் இல்லாத கிடங்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசி உட்பட RM2.1 மில்லியன் மதிப்பிலான மானிய அரிசியை கைப்பற்றியுள்ளது.

வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பிரிவு, மே 15 மற்றும் 16 தேதிகளில் காவல்துறை மற்றும் மலேசிய சோதனைச் சாவடிகள், எல்லை ஏஜென்சியுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 645.75 மெட்ரிக் டன் அரிசி கைப்பற்றப்பட்டது.

ஆய்வு செய்ததில், பாடி மற்றும் அரிசி கட்டுப்பாடு சட்டம் 1994ன் கீழ் வணிக வளாகத்திற்கு உரிமம் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

விலைக்கட்டுப்பாட்டுப் பொருட்களை, குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசியைத் தவறாகப் பயன்படுத்துகிறதா என்பதைத் தீர்மானிக்க, நிறுவனம் மீதும் விசாரணைகள் நடத்தப்படுவதாக அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சபா, சரவாக் மற்றும் லாபுவான் மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் பச்சரிசிக்கு 10 கிலோவுக்கு 31 ரிங்கிட் சில்லறை விலையுடன் டன்னுக்கு 950 ரிங்கிட் மானியம் வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சு கூறியது.

பாடி மற்றும் அரிசி கட்டுப்பாடு சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு இணங்குமாறு அனைத்து உரிமதாரர்களுக்கும் நினைவூட்டப்படுகிறது என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *