சர்ச்சையாகும் AR RAHMAN இசை நிகழ்ச்சி! – ஏற்பாட்டுக் குழு விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

எதிர்வரும்  27th July 2024 இசைப்புயல் AR RAHMAN இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் கடந்த 5 மே இயங்கலையில் தமிழ் ஊடகவியளாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கடந்த AR RAHMAN இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதன் தொடர்பான சர்ச்சைக்கு இசைப்புயல் AR ரகுமானும் ஏற்பாட்டுக் குழுவான STAR PLANET நிறுவனமும் முழுமையான விளக்கத்தை அளித்துள்ளனர்.


3 மணி நேரம் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் இசைக் கலைஞர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, பாடல்கள் வரிசைப்படுத்தப்படுவதாகவும், இசை நிகழ்ச்சிக்கு முன்னமே மலேசியர்களிடம் கருத்துகளைச் சேகரித்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் அமைந்ததாகவும் இம்முறை 90% பாடல்கள் தமிழில் அமையும் என்றும் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக STAR PLANET நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து AR ரகுமான் தெரிவிக்கையில் மலேசியாவில் பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழ்வதால் அனைவருக்குமான ஓர் இசை நிகழ்ச்சியாக இது அமைவதாகவும் நான் தமிழன் என்பதால் மொழி உணர்வுடன் என்னுடைய தாய் மொழியில் அதிகமான பாடல்களைப் பாடுவதாகவும் அனைத்து மொழி மக்களுக்கும் என் இசையை ரசிக்கும் வகையில் இருக்க தாம் விரும்புவதாக AR ரகுமான்  விளக்கமளித்துள்ளார்.

நிகழ்ச்சியின் மேல்விவரங்களுக்கு https://starplanet.com.my/show/arrahmankl2024/


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *