RM 232.5 மில்லியன் மெகா ஊழல்!- முகைதீனின் முயற்சி தோல்வி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 11: முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின், தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள  RM 232.5 மில்லியன் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை மீண்டும் நிலைநிறுத்திய முந்தைய மேல்முறையீட்டு நீதிமன்றக் குழுவின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய விண்ணப்பித்த நிலையில்,  இன்று அந்த  முயற்சியில் தோல்வியடைந்தார்.

முந்தைய அமர்வின் முன் கொண்டுவரப்பட்ட அரசுத் தரப்பு மேல்முறையீடு, விசாரித்து தீர்ப்பளிக்கத் தேவையான அதிகார வரம்பைக் கொண்டுள்ளது என்று  நீதிபதி அசிசா நவாவி தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்ற ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினர், தெரிவித்துள்ளனர்.

எனவே, மறுஆய்வுக்கான விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று இன்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.

இதன் அடிப்படையில் இனி முகைதீனின் இந்தக்  குற்றவியல் வழக்கு மீண்டும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன விபாவா திட்டம் தொடர்பாக கடந்த 2021 பிப்ரவரி 8 மற்றும் ஆகஸ்ட் 20 க்கு இடையில் பெர்சாத்துவுக்காக RM232.5 மில்லியனைப் பெற முயன்றதன் மூலம், முகைதீன் பிரதமராக இருந்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *