கார் மோதி 24 வயது இளைஞர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட் 4: ஜொகூர், இஸ்கண்டார் புத்ரி புக்கிட் இண்டாவில் உள்ள பெர்சியாரான் இந்தா ரவுண்டானாவில்,  கார் மோதியதில் 24 வயது இளைஞன் கொல்லப்பட்டான். அவனது நண்பன் பலத்த காயம் அடைந்தான்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாதுகாப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக இஸ்கண்டார் புத்ரி காவல்துறை தலைவர், உதவி ஆணையர் எம். குமரேசன் தெரிவித்தார்.

இதன் தாக்கத்தால், வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்டவர், காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் மற்றும் வலது கை உடைந்தது.

அவரது நண்பரான 31 வயது நபர்,  தலை, கால்கள் மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்தார் என்று எம்.குமரேசன் ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *