தேசிய தினத்தை முன்னிட்டு 24 மணிநேர ரயில் சேவை! - ரேபிட் கேல் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ் 15:  நாட்டின் 67வது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ரேபிட் கேஎல்லின் அனைத்து  ரயில் சேவைகளும் 24 மணி நேரமும் இயங்கும் என்று  பிரசாரனா மலேசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகளில் LRT, MRT மற்றும் மோனோ ரயில் பாதை ஆகியவை அடங்கும் என்று பிரசாரனாவின் தலைவரும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகமட் அசாருதீன் மாட் சாஹ் தெரிவித்தார்

தேசிய தின கொண்டாட்டங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் பிரசாரனாவின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நீட்டிக்கப்பட்ட சேவை முதல் முறையாக வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்

இந்த சேவைகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 6.00 மணி முதல் மறுநாள் இரவு 11.30 மணி வரை செயல்படும் என்று தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்தை கொண்டாட விரும்பும் நகரவாசிகளுக்கு வசதியாக, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 3.00 மணி வரை, புத்ராஜெயா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையத்திலிருந்து டத்தாரன் புத்ராஜெயாவிற்கு 60 இலவச ஷட்டில் பேருந்துகளை ரேபிட் கேஎல் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *