அன்வார் ஒருநாளும் இந்தியச் சமூகத்தைக் கைவிடமாட்டார்! – முன்னாள் அமைச்சர் சிவக்குமார் நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

இந்தியச் சமுதாயத்தின் மீது பிரதமர் அன்வார் அவர்களுக்கு அன்பும் பாசமும் மிகுந்துள்ளதைத் தாம் அறிவதாக மனிதவள முன்னாள் அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவக்குமார் நம்பிக்கை அளித்தார்.

அன்வார் பிரதமராகப் பதவி ஏற்ற நாள் முதல்  அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இது மிகவும் குறுகிய காலம், இதனை மட்டுமே கொண்டு அவரை எடைபோட்டு விடக்கூடாது! ஐந்து ஆண்டுகள் முழுமையாக அன்வார் தலைமையில் ஆட்சி தொடர்ந்தால், நிச்சயம் அவர் இந்தியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.

மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் , தெக்குனுக்கு 30 மில்லியன் ரிங்கிட் , பெண் எனப்படும் அமானா இக்தியார் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட், இந்திய இளைஞர்களின் தீவேட் தொழில் திறன் கல்விக்கு 2 மில்லியன் ரிங்கிட், தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு நிதி என தனது அமைச்சரவையின் வாயிலாகச் செயல்படுத்தி வருகிறார்.  


ஆகவே கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் Pang Sock Tao க்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

sxgtow