திரெங்கானுவில் 26 வெளிநாட்டினர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 11: திரெங்கானுவில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 26 வெளிநாட்டவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட நடவடிக்கையில் பூலாவ் பெர்ஹெந்தியான் பகுதியில் 26 பேர் பிடிபட்டதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ ரூஸ்லின் ஜூசோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 22 முதல் 50 வயதுடைய அனைவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இங்கு வணிகங்களைச் செய்து வேலை செய்து வருவதாக நம்பப்படுகிறது," என்று அவர் கூறினார்.

விசாரணையில், சந்தேக நபர்கள் தண்ணீர் டாக்சிகள் மற்றும் ஸ்பா சேவைகளை இயக்கியதாகவும். ரிசார்ட் ஒன்றின் காவலாளிகளாகவும் பணிபுரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் சுமார் ஒன்பது மாதங்களாக வேலை செய்ததாக நம்பப்படுகிறது என்று ரஸ்லின் கூறினார். இது தொடர்பான  விசாரணைகளுக்கு உதவ இரண்டு உள்ளூர் முதலாளிகள் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *