தொலைபேசி மோசடியில் 30 ஆயிரம் இழந்த மாது!

top-news
FREE WEBSITE AD

 ஜெம்போல், செப்டம்பர் 3: சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தொலைபேசி மோசடியில், 44 வயதான மாதுவான தனியார் நிறுவன உதவி மேலாளர் 30,000 ரிங்கிட் இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆகஸ்ட் 27 அன்று தகவல் தொடர்பு அமைச்சு என்று சொல்லிக்கொண்டு ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும்,  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் அவரது தொலைபேசி எண் தடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மாது தெரிவித்ததாக ஜெம்போல்  மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்பிரெண்டனட்  ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்ததை அடுத்து,  சந்தேக நபர், வழக்கை சரிபார்க்க அனுமதிக்க 999க்கு  என்னுக்கு அழைப்பை இணைப்பதாகச் சொன்னார்.

பின்னர் கிளந்தான் போலீஸ் படையைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட ஒருவரிடம் பாதிக்கப்பட்டவர் பேச அனுமதிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு அவர்களது மிரட்டலின் வழி, தன் மீது போதைப்பொருள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ளதாகத் தெரிவித்ததாகவும் அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இதனை அடுத்து தாம் அந்தக் கும்பலிடம் 30,000வெள்ளியை இழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *