LRT3 கேபிள் திருட்டு! பாகிஸ்தானியர் உட்பட ஐவர் கைது!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஆகஸ்ட் 3: கட்டுமானத்தில் இருந்த எல்ஆர்டி 3 நிலையங்களில் இருந்து கேபிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக  பாகிஸ்தானியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஐந்து பேரும் கட்டுமானப் பணியிடங்களை அணுகிய ஒப்பந்ததாரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இழப்பு 25 லட்சம் வெள்ளிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

32 முதல் 41 வயதுடைய சந்தேக நபர்கள் வியாழன் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஷா ஆலம் மற்றும் டாமன்சாராவில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் எல்ஆர்டி 3 திட்டத்தில் ஒப்பந்ததாரர்களாக பணிபுரிந்ததும், கட்டுமான தளங்களுக்கு அணுகல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது .

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *