ஜெலியில் 3 கார்கள் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 10 பேர் காயம்!

top-news
FREE WEBSITE AD

ஜெலி, ஜூலை 1: இங்குள்ள பத்து மெலிந்தாங்கில் இன்று மூன்று கார்கள் மோதிய விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

மதியம் 2.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மேலும் இருவர் காயமின்றித் தப்பினர். காயமடைந்தவர்களில் ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள்  ஒரு சிறுவனும் அடங்குவான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா சிட்ரா மற்றும் பெரோடுவா ஆக்ஸியாவில் தலா ஐந்து பேர் பயணம் செய்தனர்.  மற்ற இருவரும் புரோட்டான் பெசோனாவில் இருந்தனர்.

பிற்பகல் 2.58 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து ஒன்பது தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஜெலி தீயணைப்பு நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக ஜெலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *