டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை நொறுங்கி விழுந்ததில் 3 பேர் பலி!

top-news
FREE WEBSITE AD

இன்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ன் மேற்கூரையின் ஒரு பகுதி தொடர்மழையில் உடைந்து நொறுங்கி விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில், விமான சேவைகளும் டெர்மினல் 1ல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் டெர்மினல் 2 மற்றும் 3-ல் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் முழுமையாக இயக்கப்பட்டதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர். டெர்மினல் 1 வருகையில் விமானங்களும் செயல்பட்டன. இருப்பினும், மேற்கூரை இடிந்து விழுந்ததால், டெர்மினல் 1-ல் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.


இந்நிலையில், டெல்லி விமான நிலையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளது. டெல்லி விமான நிலைய அதிகாரிகள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளனர். "டெல்லி விமான நிலையம் தனிநபர்களின் குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குகிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளோம்," என்று டெல்லி விமான நிலையம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதற்கிடையில், டெர்மினல் 1-ல் இருந்து சில விமானங்கள் டெர்மினல் 2 மற்றும் 3-க்கு திருப்பி விடப்பட்டதால், பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்து அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு டெல்லி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *