பேராக்கில் தங்குவோருக்கு ஓர் இரவுக்கு RM 3 கட்டணம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20:  அடுத்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பேராக் மாநிலத்திற்கு வருகை தந்து தங்கும் நபருக்கு ஓர் இரவுக்கு 3 வெள்ளி சேவைக் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்கக் குழுத் தலைவர் சாண்ட்ரியா எங் தெரிவித்தார். பேராக் தங்கும் விடுதி சட்டம் 2023 இன் ஒரு பகுதி இந்த விதிமுறை என்று அவர் கூறினார்.


பேராக்கிற்கு வருகை தரும் ஆண்டு 2024 பிரச்சாரத்துடன் இணைந்து, இந்தப்புதிய கட்டணத்தை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


தங்கும் விடுதிகள், முகாம்கள், அறைகள், படகு இல்லங்களுக்கு இந்த விதி பொருந்தும் என்றும், சம்பந்தப்பட்ட தங்குமிட உரிமையாளர்கள் உரிமத்திற்கு அரசிடம் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *