பெரிக்காத்தான் ஆளும் நான்கு மாநிலங்களுக்காக உருவாகியுள்ள SG4 Sdn Bhd, பாதிப்பை ஏற்படுத்தலாம்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு: பெரிகாத்தான் நேசனலின் கீழ் உள்ள நான்கு மாநிலங்களில் ஏதேனும் ஒன்று பாரிசான் நேசனலுக்கு (பிஎன்) மாறினால், எஸ்ஜி4 குரூப் செண்டிரியான் பெர்ஹாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று டத்தோஸ்ரீ தக்கியுடீன் ஹசான் தெரிவித்துள்ளார்.

மலேசியா நிறுவனங்களின் ஆணையமான SSM ல்  பதிவுசெய்யப்பட்ட பிற நிறுவனங்களைப் போலவே, அதன் பங்காளிகள் அல்லது பங்குதாரர்கள் எவரும் எந்த நேரத்திலும் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என்று SG4 நிர்வாகச் செயலாளருமான அவர் கூறினார்.

ஒரு நிறுவனம் நிறுவப்படும் போது, ​​ பங்குதாரர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தபோதிலும், அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம்.

சில பகுதியினர் அல்லது பிற மாநிலங்கள் கூட நிறுவனத்தில் சேர விரும்பினால், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்,

 மலேசியாவில் உள்ள எந்த மாநிலங்களும் SG4 குரூப் Sdn Bhd இல் சேரலாம், பாரிசான் கீழ் உள்ள மாநிலங்கள் கூட" என்று அவர் மேலும் விளக்கினார்.

கெடா, திரெங்கானு, கிளந்தான் மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த SG4 குரூப் Sdn Bhd ஐ நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் புவாட் சர்காஷி SG4 Group Sdn Bhd ஐ நிறுவும் முடிவை விமர்சித்தார்.

இந்த முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறிய அவர், ஒரு நிறுவனத்தின் உரிமையை நான்கு மாநிலங்கள் பகிர்ந்து கொள்வது முன்னெப்போதும் இல்லாதது என்று குறிப்பிட்டார்.

இந்த பகிரப்பட்ட உரிமையானது, உழைப்பு, சொத்துக்கள், பங்குகள் மற்றும் இயக்குநர்கள் குழு தொடர்பான சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

 தற்போது பெரிகாத்தான் நேஷனல் தலைமையிலான திரெங்கானு, கிளந்தான், பெர்லிஸ் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் மற்ற கட்சிகளிடம் வீழ்ந்தால், நிறுவனத்தின் எதிர்காலம் என்ன ஆகும் என அவர் கேள்வி எழுப்பினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *