புத்ராஜெயாவில் 50% அரசு ஊழியர்கள் உடல் பருமனாக உள்ளனர்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 3: புத்ராஜெயாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களில் பாதி பேர் உடல் பருமனாக உள்ளனர் என்று அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலி தெரிவித்துள்ளார்.

இதனால்தான் அரசு ஊழியர்கள் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இங்கு கார்-ஃப்ரீ டே  நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜூகி இவ்வாறு கூறினார்.

இந்த திட்டத்தை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தொடங்கி வைத்தார்.

பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா மற்றும் பொது சேவைத் துறையின் (PSD) தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அகமட் தஹ்லான் அப்துல் அஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாதாந்திர நிகழ்வாக  நடைபெறும் இன்றைய கார்-ஃப்ரீ டே நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, புத்ராஜெயா குடியிருப்பாளர்களுக்கு உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், அத்துடன் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது உடல் உழைப்பு இல்லாததாகவும் ஜாலிஹா கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *