வடக்கு சுமத்ரா கடற்கரையில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

- Muthu Kumar
- 18 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 18:
வடக்கு சுமத்ரா கடற்கரையில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, தீபகற்ப மலேசியா முழுவதும் பல மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா தகவலின் படி, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் அதன் பாதிப்பு உணரப்பட்டதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சிபோல்காவில் இருந்து கிழக்கே 41 கிமீ தொலைவில் காலை 6.22 மணியளவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என மெட்மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *