சாலையில் ஓய்வுபெற்றவரைத் தாக்கிய 52 வயது வர்த்தகர் கைது!
- Shan Siva
- 09 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 9: நேற்று செராஸ், பத்து 9 இல் உள்ள பெக்கான் சன்டெக்ஸ் போக்குவரத்து
விளக்குகளில் நடந்த ஒரு சிறிய சாலை விபத்தைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஒருவரைத் தாக்கி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் 52 வயது வர்த்தகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
69 வயதான
பாதிக்கப்பட்டவரிடமிருந்து தனது துறைக்கு மாலை 4.49 மணிக்கு புகார் கிடைத்ததாக காஜாங் காவல்துறைத்
தலைவர் நாஸ்ரோன் அப்துல்
யூசோஃப் கூறினார்.
புகார்தாரர் மற்றும்
சந்தேக நபரின் வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு சிறிய விபத்தில் இருந்து இந்த சம்பவம்
நிகழ்ந்தது என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
தாக்குதல் மற்றும்
குற்றவியல் மிரட்டலுக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 323 மற்றும் 506 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, சந்தேக நபர் இரவு 11.30 மணியளவில் காஜாங்கில் கைது
செய்யப்பட்டு இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாக நாஸ்ரோன் கூறினார்.
இந்த சம்பவத்தின் வைரலான
காணொளியில், புரோட்டான் வீராவில் ஒரு
முதியவரை ஒருவர் அடிப்பதைக் காட்டியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



