ஜொகூரில்  குடிநுழைவு துறையினர் சோதனையில் 52 வெளிநாட்டவர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

நேற்று (மே 9) இஸ்கந்தர் புத்ரியில் உள்ள அலுமினிய தொழிற்சாலை மற்றும் பேக்கரியில் நடத்தப்பட்ட சோதனையில் 52 வெளிநாட்டவர்களையும், இரண்டு மலேசியர்களையும் குடிநுழைவு துறையினர் கைது செய்தனர்.

வியாழன் (மே 9)காலை 11 மணிக்கு நடந்த இந்த சோதனையில் முறையான அனுமதி அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் குறித்து கிடைத்த பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கபட்டதாக  ஜொகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் பைசல் ஷம்சுதீன் கூறினார்.

அலுமினிய தொழிற்சாலையை சுற்றி வளைக்கப்பட்டவர்களில் 10 பாகிஸ்தானியர்கள்,  ஒன்பது வங்கதேசிகள், நான்கு சீன பிரஜைகள் மற்றும் மூன்று மியான்மர் நாட்டவர்கள் ஆவர், அனைவரும் 20 முதல் 46 வயதுடைய ஆண்கள் மற்றும்
தொழிற்சாலை மேலாளரும் ,43 வயதான மலேசிய பெண்மணியும்  கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் மற்றொரு இடமான பேக்கரியில் ஒன்பது பெண்கள், இரண்டு பாகிஸ்தானிய ஆண்கள் மற்றும் 21 முதல் 42 வயதுடைய ஒரு நேபாளி ஆண் உட்பட 23 மியான்மர் பிரஜைகள்  கைது செய்யப்பட்டதாக பைசல் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *