ஜொகூரில் 58 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

top-news
FREE WEBSITE AD


 ஜொகூர், ஜூலை 1: ஜொகூர், கோத்தா திங்கி, பண்டார் தெங்கராவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டுகள் இல்லாததற்காக மூன்று மலேசியர்களையும், 58 சட்டவிரோத நபர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

 

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்ததாக கோத்தா திங்கி போலிஸ் தலைமைக் கண்காணிப்பாளர் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.

 

தொழிற்சாலையின் பராமரிப்பாளர்களான இரண்டு மலேசியர்களையும், 18 முதல் 53 வயதுக்குட்பட்ட 58 சட்டவிரோத நபர்களையும் குழு தடுத்து வைத்தது.

 

விசாரணையில் உதவுவதற்காக, தொழிற்சாலையின் மேற்பார்வையாளரான மற்றொரு மலேசிய நபரை  கோத்ததி டிங்கி போலீஸ் தலைமையகத்தில் இரவு 10.30 மணியளவில் போலீசார் கைது செய்தனர்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *