பேராக்கில் 5 தொழிற்சாலைகள் தீயில் எரிந்து நாசம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 23: பேராக், சிம்பாங் பூலாயில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து தொழிற்சாலைகள் எரிந்து நாசமாகின, இருப்பினும் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீ விபத்து குறித்து அதிகாலை 1.44 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

தீ விபத்து ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்டு,  பின்னர் அருகிலுள்ள நான்கு இடங்களுக்கும் பரவியதாக நம்பப்படுகிறது.

தபிரார்த்தனைப் பொருட்களை உற்பத்தி செய்யும் மூன்று தொழிற்சாலைகள், வண்ணப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் மூலிகை தேநீர் பதப்படுத்தும் மற்றொரு தொழிற்சாலை ஆகியவை இந்த தீவிபத்தில் சேதமுற்றதாக சபாரோட்ஸி கூறினார்.

பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் 70% முதல் 80% வரை சேதமடைந்துள்ளன.  இழப்பு குறித்த மதிப்பீடு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக சபரோட்ஸி கூறினார்.

38 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 15 தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும், அதிகாலை 4.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்!

Satu kebakaran awal pagi di Simpang Pulai, Perak memusnahkan lima kilang, termasuk kilang barangan sembahyang dan teh herba. Tiada kecederaan dilaporkan. Api dikawal pada 4.10 pagi oleh 53 anggota bomba, termasuk sukarelawan. Nilai kerugian sedang disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *