வளர்ப்பு நாயினால் காப்பாற்றப்பட்ட 5 உயிர்கள்! - இலங்கையில் நெகிழ்ச்சியான சம்பவம்!

top-news
FREE WEBSITE AD

இலங்கையின் களுத்துறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயால் குடும்பத்தில் உள்ள 5 பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அதையடுத்து மண்சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது. இதனால் பல மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உடைமைகளையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் களுத்துறை, அகலவத்த - பெல்லன பிரதேசத்தில் வசிக்கும் ஓர் குடும்பத்தில் விதானலகே சோமசிறி என்பவர்களின் வளர்ப்பு நாய்  வழக்கத்தினை விட அதிக சத்தத்துடன்  வீட்டின் பின்புறம் நின்று குரைத்துக்கொண்டிருந்தது.

குடும்ப தலைவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்வையிட்டுள்ளார்.அப்பொழுது தங்களுடைய வளர்ப்பு நாய் தன்னிடம் ஏதோ கூறுவதை போன்று உணர்ந்து தாய், தந்தை மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்புறம் இருந்த மலை போன்ற மண் மேடு முழுவதுமாக இடிந்து வீட்டின் மீது விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தனது வீட்டின் வளர்ப்பு நாயான களுவினால் தங்களது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *