ஷா ஆலாமில் கொள்ளை: பெண் உட்பட 6 பேர் கைது

top-news

ஷா ஆலாம், பிப். 19-

செக்‌ஷன் 7, ஜாலான் பிளம்பும் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கத்தி ஆயுதம் காட்டிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை உட்பட ஆறு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷா ஆலாம் மாவட்ட காவல் துறை தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ராம்சே எம்போல் தெரிவித்ததாவது, காலை சுமார் 5.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிக்கப்பட்டு சுமார் 500 ரிங்கிட் இழந்துள்ளார்.

அன்று மதியம் 2.30 மணியளவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. தனியாக நடந்து தனது குடியிருப்பு பகுதியில் உள்ள வழித்தடத்தில் குப்பையை எறியச் சென்றபோது குற்றவாளிகள் அவரை அணுகி கத்தியைக் காட்டி கொள்ளை நடத்தியதாக ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன.

இதனைத் தொடர்ந்து, அதே நாள் இரவு சுமார் 9 மணியளவில் ஷா ஆலாம்  மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளூர் பெண் ஒருவரும் இருப்பதாகப் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *