அருவியில் சிக்கிய 60 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு!

top-news
FREE WEBSITE AD

தங்காக், செப் 16: குனோங் லாடாங் நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் சுற்றுலா சென்று கொண்டிருந்த 60 பேரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டனர்.

60 தொழிற்சாலை தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து மதியம் 12.50 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக தங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரஃபியா அஜீஸ் தெரிவித்தார்.

மழையைத் தொடர்ந்து மலை உச்சியில் இருந்து இறங்கிய நீரின் எழுச்சி காரணமாக தொழிற்சாலை ஊழியர்கள் சிக்கிக்கொண்டதை தங்கள் பணியாளர்கள் வந்தடைந்தபோது கண்டறிந்ததாக அவர் கூறினார்

அவர்கள் அனைவரும் கயிறுகளைப் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டதாகவும்,  மீட்பு நடவடிக்கை பிற்பகல் 3.20 மணியளவில் முடிந்தது என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *