63 சட்டவிரோதக் குடியேறிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

- Shan Siva
- 05 Jul, 2024
ஈப்போ, ஜூலை 5: லங்காப்பில் உள்ள குடியேற்ற முகாமில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 63 சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 42 ஆண்களும், 18 முதல் 47 வயதுக்குட்பட்ட 21 பெண்களும் அடங்குவர் என மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர்
மீயோர் ஹிஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.
குடிநுழைவுச்
சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால்
தீர்ப்பளிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தி, சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர்கள்
வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தங்கள்
நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள், மீண்டும்
நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்
என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *