ஜித்ராவில் 6 கடைகள் தீயில் எரிந்து நாசம்!

top-news
FREE WEBSITE AD

ஜித்ரா, ஜன 23: கம்போங் சிம்பாங் 4 கெர்பான் ஆயர் ஹீத்தாமில் உள்ள ஆறு கடைகள் நேற்று மாலை தீ விபத்தில் எரிந்து நாசமாகின.

இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு பிற்பகல் 3.29 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக மூத்த செயல்பாட்டுத் தளபதி ஐ. அஹ்மத் அமினுதீன் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழு சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்து ஒன்பது தன்னார்வ தீயணைப்புப் படைகளைச் சேர்ந்த 40 பேர் உதவியுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்டவுடன், வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த ஆறு கடைகள் தீயில் சிக்கியதாகவும், சேதத்தின் அளவு சுமார் 80 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், மாலை 5.04 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அஹ்மத் அமினுதீன் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *